J/67 திருநகர் கிராம அலுவலர் அலுவலகத்தில் 18.05.2023 அன்று 10.00 மணியளவில் கிராம அலுவலரின் ஒழுங்குபடுத்தலில் டெங்கு ஒழிப்புத் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

J/87 சோனகதெரு வடக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு அனர்த்த நிவாரண சேவைப் பிரிவினால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட மண்டூஸ் புயல்காற்றில் ஏற்பட்ட வீட்டின் பாதிப்பிற்கான நஷ்ட ஈட்டுக் காசோலை பிரதேச செயலாளரால் வழங்கிவைக்கப்பட்டது.

J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சீரடிசாயான் அறக்கட்டளையினால் நலிந்த 20 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகள் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பங்கு பற்றுதலுடன் 20.05.2023 சனிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தினால் J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் சிறுவர்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு ஒன்று 21.05.2023 காலை 8.00 மணியளவில் விக்கினேஸ்வரா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.இவ் விளையாட்டுக்களில் சிறுவர் சமூகத்தின் அங்கத்தவர்கள்,அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.இந் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.








