யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசார பிரிவால் வெசாக் வார்த்தின் இரண்டாம் நாள் மரநடுகை வேலைத்திட்டம் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் 2023.05.03 ஆம் திகதி நடைபெற்றது. இவ் வேலைத்திட்டத்தில் பாதிரியார் ஸ்ரலின் இராசேந்திரம் அவர்களும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களான திரு.இ.யோன்சன்,திரு.எஸ்.ரூபகுமார்,திருமதி.லி.சுபேந்தினி,அ.ரஜிதா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

வெசாக் வாரத்தினை முன்னிட்டு எமது யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசாரப் பிரிவால் வெசாக் மரநடுகை வேலைத்திட்டம் 02.05.2023 அன்று பி.ப 4.00 மணிக்கு புனித யுவானியார் தேவாலயத்தில் இடம்பெற்றது.இதில் அத் தேவாலய பாதிரியார்,கிராம மட்ட அலுவலர்கள்,மாதர் சங்கத்தினர்,பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

வெசாக் வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் யா/விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று 03.05.2023 காலை 10.00 மணிக்கு பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன ப் பயிற்சி நடைபெற்றது. இப் பயிற்சியின் வளவாளராக யோகப் போதனாசிரியர் திரு.சோ.முகுந்தன் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும் ,பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.








