
J/75 சுண்டிக்குளி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் நாட்டின்75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு இன்று 2022-11-23 புதன்கிழமை சென் சாள்ஸ் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது. இதில் கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், மாநகர சபை உறுப்பினர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாநகர சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பால்நிலை வன்முறைக்கெதிரான செயற்குழு உறுப்பினர்களுக்குரிய மூன்றுநாள் பயிற்சிப் பட்டறை எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்று 18.11.2022 வெள்ளிக்கிழமை நிறைவடைந்துள்ளது.முதலாம் நாள் செயலமர்வில், போதைப் பொருள் பாவனையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் பற்றி வளவாளர் திரு.பிறேம் அவர்களும் ,இரண்டாம் நாள் செயலமர்வில் இளவயது கர்ப்பம் ,பால்நிலை வன்முறைகள் இடம்பெறும் வடிவங்கள்,அப் பிரச்சனைகளுக்கு அணுக வேண்டிய சேவை நிலையங்கள் தொடர்பாக வளவாளர் Dr.குருபரன் மகப்பேற்று வைத்தியர் யாழ்.போதனா வைத்தியசாலை அவர்களும், மூன்றாம் நாள் செயலமர்வில் பால்நிலை வன்முறை தொடர்பான சட்டங்கள் பற்றி வளவாளர் புராதனி விரிவுரையாளர்,சட்டத்துறை,யாழ் பல்கலைக்கழகம் அவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் 22.11.2022 பி.ப 3.00 மணியளவில் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாதர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.








