

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் ,கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.அந்நாளில் எமது அலுவலகத்திலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருடந்தோறும் தீபங்கள் ஏற்றுவது போல் இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தினை ஏற்றி அலுவலகத்தினை தீப ஒளியில் அலங்கரித்திருந்தனர்.

J/62 கொழும்புத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இன்று 2022-12-08 வியாழக்கிழமை 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சத்துணவுமா உருண்டைகள் வழங்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்திற்கு திரு.லயன் கஜேந்திரன் அவர்கள் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.

J/62 கொழும்புத்துத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இன்று 2022-12-08 வியாழக்கிழமை 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கருத்துக்களை யாழ்ப்பாணம் பொலீஸ் உத்தியோகத்தவர்கள் வழங்கினார்கள். இதில் பாடசாலை அதிபர், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







