75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று J/80 கிராம அலுவலர் பிரிவில் போதை ஒழிப்புத் தொடர்பான கருத்தரங்கு 06.12.2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3மணியளவில் JSAC நிறுவனத்தின் அனுசரணையுடன் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டின் மூலம் நடைபெற்றது.இந் நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர் (போதை ஒழிப்பு), பிரதேச செயலக போதை ஒழிப்பு உத்தியோகத்தர், JSAC நிறுவன உத்தியோகத்தர் ,கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மாதர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.







