ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නNews & Events
රාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
"தூயகரங்கள் தூயநகரகம்" J/81 கோட்டை
J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவின கோட்டை வெளிபுற பகுதியில் "தூயகரங்கள் தூயநகரகம்" எனும் செயற்திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபை மற்றும் யாழ் பிரதேச செயலக ஏற்பாட்டில் 13.02.2021 காலை 7.30 மணி தொடக்கம் தூய்மைப்படுத்தல் செயல் திட்டம் இடம்பெற்றது. இதில் பிரதேச செயலாளர்,மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், கிராம அலுவலர், பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், மாநகர சபை அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள்,மீனாட்சி சனசமூக நிலைய உறுப்பினர்கள், கொட்டடி கடற்றொழில் சங்க உறுப்பினர்கள், மீனாட்சி பகுதி வாழ் 100 ற்கு மேற்பட்ட மக்களின் பங்களிப்புடன் பாதீனிய ஒழிப்பு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
"தூயகரங்கள்தூயநகரகம்"தூய்மைப்படுத்தல் செயல் திட்டம்
யாழ் குருநகர் J/ 69 றெக்கிளமேசன் மேற்கு கடற்கரைப் பகுதியில் "தூயகரங்கள் தூயநகரகம்" எனும் செயற்திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபையால் சனிக்கிழமை 13.02.2021 தூய்மைப்படுத்தல் செயல் திட்டம் இடம்பெற்றது. இதில் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், கிராம அலுவலர்,மாநகர சபை அதிகாரிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு பெரும் அளவிலான வாகனங்கள் பயன்படுத்தி கழிவகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவு
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்ததின் 2019ஆம் ஆண்டு கடும் மழையினால் சேதமடைந்த J/68, J/81 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த இரு வீடுகளுக்குரிய திருத்தத்திற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுக் காசோலைகளை பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர் அவர்கள் இன்று 10.02.2021 வழங்கிவைத்தார்.
புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் அங்கத்தவராக உள்ள யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயாலளர் பிரிவுகளுக்குட்பட்ட க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு 04.02.2021 வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக எமது அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டு புலமைப் பரிசிலுக்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணவர்களும் இவ் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டனர்.