ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නNews & Events
රාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
"வாழ்வாதாரஅபிவிருத்திமைய" திறப்பு விழாJ/70 குருநகர் கிழக்கு
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுற்குட்பட்ட J/70 குருநகர் கிழக்குகிராம அலுவலர்பிரிவில் “நிறைவான கிராமம்" அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட "வாழ்வாதார அபிவிருத்திமைய" திறப்பு விழா நேற்றைய தினம் 2021-03-03 இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கட்டடத்தை திறந்து வைத்தார். எமது பிரதேச செயலாளர்,யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், பிரதேச செயலக கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் இங்கு கலந்து கொண்டனர்.
கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தின் "அணையாத தீபம் "வேலைத்திட்டம்



புதிய தண்ணீர்தாங்கிஅமைத்தலும் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வும்
எமது பிரதேச செயலளர் பிரிவிற்குட்பட்ட J/64 பாஷையூர் கிழக்கு, J/65 பாஷையூர் மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய அபிவிருத்தித்திட்டப் பணியாக புதிதாக தண்ணீர் தாங்கி அமைக்கப்பட்டு நீர் சுத்திகரிப்பு நிலையம் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் 03.03.2021 இடம்பெற்றது.இந்நிகழ்வில்யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார் .மேலும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர்,அப் பிரிவின் கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,பாஷையூர் புனித அந்தோன்யார் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் ,பொதுமக்கள் எனப் பலர் அங்கு கலந்து கொண்டிருந்தனர்.
"கிராமத்துக்கு ஒரு மைதானம்" அங்குரார்ப்பண நிகழ்வு
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாயாராஜாபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் கெளரவ பிரதமர் மகிந்தராஜபக்க்ஷ அவர்களின் ஆலோசனையில் விளையாட்டுதுறை, இளைஞர் விவகார அமைச்சு மற்றும் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் “கிராமத்துக்கு ஒரு மைதானம்” செயற்திட்டம் தேசிய ரீதியில் நாடு பூராகவுமுள்ள 332 பிரதேச செயலகங்களில் கீழ் உள்ள கிராமங்களில் அமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று 02.03.2021 செவ்வாய்க்கிழமை எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிலும் இடம்பெற்றது. இந்நிகழ்வு யாழ் மாவட்டஅபிவிருத்திஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதற்கமைய தேசிய ரீதியாக காலை 10.25 மணியளவில் எமது பிரதேச செயலகத்தின் J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள விண்மீன் விளையாட்டுக்கழக மைதான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாநகர முதல்வர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் (காணி), யாழ் மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் , யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள், பொது மக்கள் என பலர் Covid - 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.