வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 22 மற்றும் 23 ம் திகதிகளில் காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 4.30 மணிவரை வடமாகாணசபை வளாகம், கைதடியில் நடைபெறவுள்ளது.
குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
1. வாசித்தலில், எழுதுதலில், விசேட தேவையுடையோருக்கான சாரதி அனுமதிப் பரீட்சையும் மருத்துவச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளலும்.
2. சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளல்.
3. தனிப்பட்ட மோட்டார் கோச்சினை ஒமினிபஸ் ஆக மாற்றம் செய்தல்
4. வாகன பதிவுப் புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல்.
5. வாகன இலக்கத்தகடு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள்.
6. வாகன உடமை மாற்ற விண்ணப்பங்கள் கையேற்றல்.
7. 2014/2015ம் ஆண்டு செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாகனங்களின் நிபந்தனைகளை நீக்குதல்.
8. வாகன நிறைசான்றிதழ் பெற்றுக் கொள்ளல்.
9. இதுவரை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு (RMB)தீர்க்கப்படாத நிலுவைகள்
10. வாகன வருமானவரி தொடர்பானவை.
குறிப்பு: வாசித்தலில், எழுதுதலில், விசேட தேவையுடையோருக்கான படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. குறித்த படிவத்தினை விசேட தேவையுடையோருக்கு வழங்கி பூரணப்படுத்தி 14.10.2022 க்கு முன்னர் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்புதல் வேண்டும்.
 
moter tr

J/62 கொழும்புத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள யா/கொழும்புத்துறை சென் ஜோசப் வித்தியாலயத்தில் இன்று 2022.10.03 திங்கட்கிழமை பாடசாலை சிறுவர்களின் போசாக்கினை மேம்படுத்துமுகமாக எமது பிரதேச செயலரின் எண்ணக்கருவில் பசுப்பால் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நற்பணிக்கு சிற்றிகாட்வயர் நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியிருந்தனர்.

IMG E8271 2

 

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையினால் வட மாகாணத்திற்கான சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2019,2020 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக எமது யாழ்ப்பாண பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்காக எமது பிரதேச செயலாளர் விருதினைப் பெற்றுக் கொண்டார்.இந்த சமூக பாதுகாப்புச் சபையின் இலக்கினை தொடர்ச்சியாக தக்க வைப்பதற்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அனைத்து கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கும் எமது செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

sir

J/77 , மருதடி J/78 அத்தியடி,J/62 கொழும்புத்துறை கிழக்கு ஆகியகிராம அலுவலர் பிரிவுகளில் கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையக்குழுக்கூட்டம் 30.09.2022 நடைபெற்றது. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மதகுருமார், குடும்ப நல உத்தியோகத்தர், மாநகரசபை உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம மட்ட சமுக அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

78

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் பங்கு பற்றும் அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2022 இற்கான சதுரங்க சுற்றுப் போட்டிகள்(ஆண்,பெண்) இன்று காலை 9.00 மணிமுதல் எமது அலுவலக வளாகத்தில் இடம்பெற்று வருகின்றன.

GA CUP.jpg 7

Scroll To Top