யாழ் நகரின் கோட்டைப் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் விரும்பத்தகாத செயற்பாடுகளைத் தவிர்க்குமுகமாக யாழ்ப்பாணத் தொல்லியல் திணைக்களத்துடன் யாழ்ப்பாணமாநகர சபையும் இணைந்து 14.10.2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு கோட்டை சுற்றுவட்டாரத்தில் நடாத்திய சிரமதானப் பணியில் எமது அலுவலர்களும் பங்குபற்றியிருந்தனர்.
தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 11.10.2022 அன்று இடம்பெற்றது. கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர், டெங்குக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

J/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் சமுக சேவை திணைக்களத்தினூடக தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிப் பயனாளி ஒருவருக்கான ILO நிதியுதவியுடனான SIYB இரு நாட்கள் பயிற்சி நடைபெற்றது.








