"அஸ்வெஸ்ம" நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்க வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல் ,வங்கிக் கணக்கு இல்லாத மற்றும் ஏற்கனவே உள்ள கணக்கின் செல்லுபடித் தன்மையை உறுதிப்படுத்தாத J/61-J/68 வரையான கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் இன்று 25.07.2023 காலை 9.00 மணிமுதல் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தமக்கான வங்கிக் கணக்கினை ஆரம்பித்தல், கணக்கின் செல்லுபடித் தன்மையை உறுதிப்படுத்தல் செயற்பாட்டிற்காக வருகைதந்துள்ளனர்.இலங்கை வங்கி,மக்கள் வங்கி,தேசிய சேமிப்பு வங்கி,பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளைகளில் பணியாற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் இவர்களுக்கான வங்கிக்கணக்கை ஆரம்ப வைப்புப் பணம் செலுத்தாமல் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதுடன் அவர்கள் எமது அலுவலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து தற்போது இப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.







