2022ம் ஆண்டுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கிடையிலான பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்ற அலுவலக முகாமைத்துவ போட்டியில் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் 28 கிராமங்களை உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற உத்தியோகத்தர்களை அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரது சார்பிலும் பாராட்டி கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
முதலாமிடம்:- J/77 மருதடி கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி. வரதராஜன் இந்துமதி
இரண்டாம் இடம்:- J/61 நெடுங்குளம் கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரான திரு.இரட்ணசிங்கம் றணேசன்.
மூன்றாம் இடம்:-J/74 யாழ் நகர் கிழக்கு திருமதி. ஆனந்தராஜா றஞ்சினி.
எதிர்காலத்திலும் இவர்களது கிராம மட்டத்திலான அர்ப்பணிப்புமிக்க சேவை இன்னும் வினைத்திறனாக அமையவேண்டும் என்பதுடன் எமது பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அவர்கள் இதுவரை வழங்கிவரும் அனைத்து ஒத்துழைப்புகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.







