எமது நாட்டின்75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு இன்று 2023.01.19 J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராமமட்ட அமைப்புகள், பிரிவு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.







