J/61 நெடுங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மத்திய வங்கியின் அனுசரணையுடன் வசந்தபுரம் முன்பள்ளியில் கல்விபயிலும் மாணவர்களுக்கு கற்றலுபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் திண்மக்கழிவகற்றலை எவ்வாறு முகாமை செய்வது என்பது தொடர்பாக மாநகரசபையின் விடயத்திற்கு பொறுப்பான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரால் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.







