பால்நிலை வன்முறைக்கெதிரான செயற்குழு உறுப்பினர்களுக்குரிய மூன்றுநாள் பயிற்சிப் பட்டறை எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்று 18.11.2022 வெள்ளிக்கிழமை நிறைவடைந்துள்ளது.முதலாம் நாள் செயலமர்வில், போதைப் பொருள் பாவனையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் பற்றி வளவாளர் திரு.பிறேம் அவர்களும் ,இரண்டாம் நாள் செயலமர்வில் இளவயது கர்ப்பம் ,பால்நிலை வன்முறைகள் இடம்பெறும் வடிவங்கள்,அப் பிரச்சனைகளுக்கு அணுக வேண்டிய சேவை நிலையங்கள் தொடர்பாக வளவாளர் Dr.குருபரன் மகப்பேற்று வைத்தியர் யாழ்.போதனா வைத்தியசாலை அவர்களும், மூன்றாம் நாள் செயலமர்வில் பால்நிலை வன்முறை தொடர்பான சட்டங்கள் பற்றி வளவாளர் புராதனி விரிவுரையாளர்,சட்டத்துறை,யாழ் பல்கலைக்கழகம் அவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.







