சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவினரால் "ஆயுள்வேத பாதுகாப்புச் சபைகளின் வலுவூட்டல் மற்றும் விழிப்புணர்வுக்கான தேசிய வேலைத்திட்டம்" (வடமாகாணம் ) தொடர்பான கலந்துரையாடல் 19.11.2022 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் திரு.சந்தன நிலகரண (மேலதிக செயலாளர் ,சுதேச வைத்தியர் பிரிவு ,அபிவிருத்தி) அவர்களும், திரு.பொ.தயானந்தன் (பணிப்பாளர் ,சுதேச வைத்தியர் பிரிவு,அபிவிருத்தி) அவர்களும் .திரு.சமல் கேனுவர(உதவிப் பணிப்பாளர்,அபிவிருத்தி) அவர்களும் , திருமதி.ஜெபநாம கணேசன் ( மாகாண ஆயுள்வேத ஆணையாளர் ,வடமாகாணம்) அவர்களும்,MDr. சிவகுமார் (ஆயுள்வேத போதனா வைத்தியசாலையின் வைத்தியர்), அவர்களும் திரு.P. திசாநாயக்கா (பதிவாளர் ஆயுள்வேத வைத்தியசாலை) அவர்களும்,
சுதேச வைத்திய அதிகாரிகள் ,மருத்துவர்கள், சுதேச வைத்திய அமைச்சின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சுதேச மருத்துவ பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.சுதேச வைத்தியம் தொடர்பான நூல்களும் இங்கு வழங்கப்பட்டன.







