எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடல்நீரேரிப் பகுதிகளில் கடலட்டை மற்றும் கொடுவா மீன் வளர்ப்புப் பண்ணைகள் அமைத்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்களில் மாகாணக்காணி ஆணையாளரின் (வடக்கு காகாணம்) அனுமதி கிடைக்கப் பெற்றவர்களுக்கு பண்ணை அமைந்துள்ள அரச காணிகளிற்கான வருடாந்த அனுமதிப்பத்திம் 19.10.2022 நேற்று பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.







