

எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு " பாதீனியம் அகற்றலும் மைதான சிரமதானமும் செய்யும் நிகழ்வும்" 23.01.2023 அன்று காலை 7.00 மணியளவில் யா/ கதீஜா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இங்கு பரம்பியிருந்த பாதீனியம் சுகாதார முறைப்படி அகற்றப்பட்டு எரித்தழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மைதானத்தின் புற்கள் வெட்டியகற்றப்பட்டன. இதில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் , பெற்றோர்கள் சமுக மட்ட அமைப்புக்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 20.01.2023 அன்று பி.ப 4.30 மணிக்கு ஒருங்கிணைந்த சமுக மேம்பாட்டு அமைப்பின் சுயதொழில் வழிகாட்டல் மற்றும் சமுக மேம்பாடு சம்பந்தமான நிர்வாகக்கூட்டம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கியூடெக் கரிதாஸ் இணைப்பாளர் திரு ஜோசேப் பாலா கிராம அலுவலர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






