எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2023.01.20 J/78 அத்தியடி கிராம அலுவலர் பிரிவில் அத்தியடி பிள்ளையார் ஆலய முன்றலிலும் அத்தியடி அறநெறிக் கல்லூரியிலும் மரநடுகை நிகழ்வும் காய்கறி மரக்கன்று விநியோகமும் இடம்பெற்றது. இந் நிகழ்வுகளில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,கிராமமட்ட அமைப்புக்கள், பிரிவு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






