சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமான இன்று 31.05.2023 எமது யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் யாழ் நகரை அண்டிய கடைகள்,முச்சக்கர வண்டி தரிப்பிடம் மற்றும் நகரப்பகுதிக்கு வருகைதரும் பொதுமக்கள் ஆகியோருக்கு புகைப்பதனால் உண்டாகும் தனிநபர் , குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த பாதிப்புக்ள்,நோய்கள் பற்றிய விழிப்புணர்வுமிக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மே 30 - யூன் 05 வரை சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு முதலாம் நாளான இன்று 30.05.2023 செவ்வாய்க்கிழமை J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் எமது பிரதேச செயலாளர் தலைமையில் மரநடுகை ஆரம்பித்து வைக்கப்பட்ட

"பாராட்டத்தக்க பிள்ளைகளை உருவாக்குவோம்" (Admirable Child) என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாதுகாப்பான முதலுதவி தொடர்பான இரண்டாவது கட்ட பயிற்சி யா /மத்தியகல்லூரியின் மாணவ தலைவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்க வளவாளர் திரு.இலங்கேஸ்வரன் மூலம் 25.05.2023 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நடாத்தப்பட்டது.

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பீடு -2023 சம்பந்தமான மூன்று நாட்கள் அடங்கிய பயிற்சி நெறி எமது பிரதேச செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் நேற்று 2023.05.25 ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் பயிற்சி நெறியில் புள்ளிவிபர உத்தியோகத்தர், வட்டார உத்தியோகத்தர்கள் மற்றும் மேற்பார்வை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்( அபிவிருத்தி) ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.

"பாராட்டத்தக்க பிள்ளைகளை உருவாக்குவோம்" (Admirable Child) என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாதுகாப்பான முதலுதவி தொடர்பான முதலாம் கட்ட பயிற்சி யா /வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்க வளவாளர் மூலம் 24.05.2023 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடாத்தப்பட்டது.






