நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளபயனாளிகளின் விபரங்கள் இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டதற்கமைய
பயனாளிகளின் பெயர் விபரங்கள் சகல கிராம அலுவலர் அலுவலகங்களிலும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தும் தமது பெயர் விபரங்கள் பட்டியலில் இல்லாதவர்களும், பெயர் விபரம் வெளியிடப்பட்டிருந்தபோதும் தமக்குரிய கொடுப்பனவுத் தொகை தொடர்பான மேன்முறையீட்டைத் தெரிவிப்பவர்களும் தொடர்ந்து ஏழாவது நாளாக எமது பிரதேச செயலகத்திற்கு வருகைதந்தவண்ணம் உள்ளனர்.அவர்களுக்கான பணிகளில் எமது உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் எட்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.எதிர்வரும் 10.07.2023 வரை பொதுமக்களாகிய நீங்கள்உங்களது மேன்முறையீடுகளை எமது அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.






