யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினால் "சாராஸ்ரீலங்கா" உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக 30.05.2022 திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை எமது பிரதேச செயலக வளாகத்தில் உணவுப்பயிர் நாற்றுகள்,விதை உள்ளீடுகள்,திரவவகையிலான இயற்கைப் பசளைகள்,பொதி செய்யப்பட்ட இயற்கைப் பசளைகள் என்பவற்றை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.இப் பயன்தரு ஒழுங்கமைப்பில் ஆர்வத்துடன் பலர் பயன்பெற்றிருந்தனர்.








