சுபீட்சத்தின் நோக்கிற்கு அமைய சமுர்த்தி பயனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியான செய்தி "அதிகரிக்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவு" இன்று முதல் கையளிப்பு!
நாட்டில் 28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல்,இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமைக்கமைய இன்று எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி கிழக்கு வங்கிச் சங்கத்தில் மக்களுக்கான கொடுப்பனவு யாழ்.மாவட்ட செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது வரையில் மூவாயிரத்து 500 ரூபாவைப் பெற்ற சமுர்த்தி பயனாளர் குடும்பம் ஒன்றுக்கு, நான்காயிரத்து 500 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும். மேலும் 2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, 3,200 ரூபா கொடுப்பனவும், அதேவேளை ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, ஆயிரத்து 900 ரூபா கொடுப்பனவும் கிடைக்கும். குறித்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை எந்தவொரு சமுர்த்தி பயனாளியும், சமுர்த்தி வங்கி மூலம், இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட பணிப்பாளர் சமுர்த்தி , மாவட்ட பணிப்பாளர் காணி, மாவட்ட சமுர்த்தி கணக்காளர்,
ஓருங்கிணைப்பு குழு தலைவரின் பிரதிநிதிகள், கடல் தொழில் அமைச்சரின் பிரதிநிதி,சமுர்த்தி முகாமையாளர்,சமுர்த்திஉத்தியோகத்தர்கள்,சமுர்த்திப் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
SAM
Sam payment.jpg 15
Sam payment.jpg 13
 
 
Scroll To Top