இன்று 01.02.2022 செவ்வாய்க்கிழமை "வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் வேலைகள்" என்ற அடிப்படையில் கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடலும் அதற்கான ஆவணங்கள் கையளித்தல் நிகழ்வும் எமது யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கௌரவ அங்கஜன் இராமநாதன் பா.உ,பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் ,இணைத்தலைவர்,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதில் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் , பல பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.








