தேசிய நீர் வழங்கல் அதிகாரசபையினரின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு 2021.12.15 புதன்கிழமை பி.ப 2.00 மணியளவில் மன்பல்உல்உலூம் மதரஸா பாடசாலை அரங்கில் நடைபெற்றது. முன்னாள் மன்னார் மாவட்ட அரச அதிபர் மதிப்பிற்குரிய திரு. குருஸ் அவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அலுவலர்கள் ,பொதுமக்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.








