யாழ்ப்பாண பிரதேச செயலகமும் பிரதேச முதியோர் சங்கமும் இணைந்து நடாத்தும் பிரதேச முதியோர் கௌரவிப்பு விழா இன்று 30.04.2024 காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திரு.நாகலிங்கம் சுந்தரராசா ( தலைவர் ,யாழ்.பிரதேச முதியோர் சங்கம் ) தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதர்சன் அர்களும் சிறப்பு விருந்தினர்களாக செல்வி.தர்ஷினி உருத்திர கோடீஸ்வரன் (உதவி மாவட்ட செயலாளர்,மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம்),திருமதி.சோபிகா றோய் றொபின்சன் உதவி பிரதேச செயலாளர்,பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்) அவர்களும்,திரு.கந்தையா ஸ்ரீதரன் (கணக்காளர்,பிரதேச செயலகம்,யாழ்ப்பாணம்)அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.வரவேற்பு நடனம்,சிறப்பு நடனம்,முதியோர் பாடல்,குறு நாடகம் போன்ற கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் அதி மூத்த பிரஜைகள் கௌரவிப்பு ,சிறந்த சமூக சேவையாளர்,சிறந்த கலைஞர்,சிறந்த தொழில் திறமையுடையவர், சிறந்த ஊடகவியலாளர் போன்றோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. முதியோர் தினத்தையொட்டி நடைபெற்ற மாகாண ,மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் க.பொ.த.உயர்தரம், புலமைப் பரிசில் பரீட்சையில் என்பனவற்றில் சித்தி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கபட்டன.

38

Scroll To Top