J/83 கொட்டடி கிராம அலுவலர் அலுவலகத்தில் 10.03.2024 அன்று செந்தில் கதிர்வேலாயுதசுவாமி அறநெறிப்பாடசாலையில் கடந்த ஆண்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சமயம் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வும்,அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சத்துணவை வழங்கிவரும் மூன்று சமூக சேவையாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.இதில் கிராம அலுவலர்,இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,அறநெறிப் பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.






