நம் நாட்டின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு பொது நிர்வாக, உள் நாட்டலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைவாக 01.02.2024 தொடக்கம் 07.02.2024 ஆம் திகதி வரை நடாத்தப்படும் மரநடுகை வாரத்தின் அம்சமாக எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்படட கிராம அலுவலர் பிரிவுகளில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.இந்த வகையில் மருத்துவக் குணமுள்ள மூலிகை மரங்கள்,மற்றும் பழமரக்கன்றுகள் நாட்டப்பட்டு வருவதுடன் சிரமதானங்களும் இடம்பெற்று வருகின்றன. J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் பொதுமக்கள் பங்களிப்புடன் சிரமதானம் இடம்பெற்றது.






