நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் 2002ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 7(1) பிரிவின் பிரகாரம் நலன்புரி நிவாரண பலன்களை செலுத்துதல் தொடர்பில் தகுதியான அனைத்து நபர்களையும் கண்டறியும் நோக்கில் கிராம மட்டத்தில் தகவல்களை சேகரித்த எமது பிரதேச செயலகத்தைச் சார்ந்த எண்ணீட்டாளர்கள் 97 பேரும் பணிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக நேற்றைய தினம் 08.05.2023 எமது பிரதேச செயலாளரால் மெச்சுரைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






