யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் தொடர்பான செயலமவர்வு இன்று 02.05.2023 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வுக்கு எமது யாழ் மாவட்ட அரசாங் அதிபர் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருந்தார்.மேலும் Dr.நா.பரமேஸ்வரன் பதிவாளர் ,சமுதாய மருத்துவத்துறை மருத்துவ பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அவர்கள் இச் செயலமர்வில் தற்காலத்தில் நடைமுறை ரீதியாக
ஆசிரியர்கள் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் தொடர்பில் உளரீதியாக எதிர்நோக்கும் சவால்கள், அவைகளை எதிர்கொள்ள வேண்டிய வழிவகைகள் பற்றி எடுத்துக் காட்டுகளுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.






